நாமக்கல்லில் வெள்ளம் புகுந்த வீடுகளில் கொள்ளை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.பள்ளி பாளையம் நகரில் ஜனதா நகர், இந்திரா நகர். மீனவர் குடியிருப்பு, நாட்டாகவுண்டம்புதூர் போன்றபகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பலர் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வெறியேறினர். சிலர்வீடுகளில் உள்ள பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு பாதுகாப்பு முகாமிற்கு சென்றனர்.
பிறகு அவர்கள் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர். அப்போது வீடுகளின் கதவுஉடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோக்களில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும்சுமார் 15 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் பரிசல்கள் மூலம் சென்று இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும்தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.