கரையை நெருங்குகிறது புயல் சின்னம்: 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் ஆந்திரா, வட தமிழகம், கர்நாடகத்தின் உட் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை 48 மணி நேரத்துக்குநீடிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.மேலும் இந்தப் புயல் கடலோரத்தை நெருங்க நெருங்க காற்றின் வேகமும் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், சென்னையில் பேய்க் காற்று வீசும்.
இதற்கிடையே மெரீனா கடற்கரையில் அலைகள் இப்போதே சீறிப் பாய ஆரம்பித்துவிட்டன. அலைகள் 100 அடி தூரம் வரை பாய்ந்துமணற்பரப்பை ஈரமாக்கின.
சென்னையில் கன மழை காரணமா ஏராளமான குடிசைப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டு சமூகக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications