தீபாவளி மாமூல் வசூல்: தொழிலாளர் துறை துணை ஆணையர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஊழியர்களிடம் தீபாவளி இனாம் வசூலித்த திருச்சி மண்டல தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கைதுசெய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் பழனி, ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில்லஞ்ச ஒழிப்பு சோதனையில் திடீரென ஈடுபட்டனர்.

அப்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயந்து போய்தாங்கள் லஞ்சமாக பெற்ற பணத்தை ஜன்னல் மூலமாக வெளியே வீசி எறிந்தனர்.

சில அதிகாரிகள் எழுந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் லஞ்சப் பணத்தை குப்பை தொட்டியில் வீசி விட்டு ஓடினர்.அவர்கள் வீசிச் சென்ற பணமெல்லாம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சிமண்டல தொழிலாளர் நலத்துறை துணை ஆணையராக (பொறுப்பு) இருப்பவர் ஆர். ரகுநாத் (வயது 57).

இவர் தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் தீபாவளி இனாம் வசூல் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுரேஷ்குமார், ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, அக்பர், பிரசன்ன வெங்கடேசன்,விஜயகுமார் மற்றும் போலீசார் மன்னார்புரத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனைநடத்தினர்.

இதில் ரூ.1,03,500 ரொக்கம் ரூ. 25,000 மதிப்புள்ள புதிய துணிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்கு பிறகு,கைப்பற்றப்பட்ட பணம், துணிகளுக்கு உரிய பதிலை அளிக்காததால் துணை ஆணையர் ரகுநாத் கைதுசெய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+