நிவாரணப் பணிகளில் அரசு படு மந்தம்: திமுக
சென்னை:
சென்னை மாநகராட்சியான ரிப்பன் கட்டடத்தை சுற்றியிருக்கும் நீரையே வெளியேற்ற முடியாதவர்கள் எப்படி மாநகர மக்களைக்காப்பாற்றப் போகிறார்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மேயருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மேயராக இருந்தபோது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே 10மண்டலங்களுக்கும் தாற்காலிக பணியாளர்கைள நியமித்து கால்வாய்களை தூர் வாரும் பணியை மேற்கொண்டேன்.இதனால் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும்புதிய சாக்கடைகள் கட்டும் வேலையையும் நிறுத்துவிட்டார்கள்.
இதனால் தான் இரண்டு நாள் மழையில் சென்னை மக்கள் சொல்லொண்ணாத துயரத்தை அனுபவித்துவிட்டனர். சென்னைமாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் பில்டிங்கை சுற்றியே நீர் தேங்கி நிற்கிறது. அதைக் கூட இன்னும் அப்புறப்படுத்தவில்லை.
வெள்ளத்தின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு தயாரிக்கக் கட்டப்பட்ட சைதை சிஐடி நகர் உணவுக் கூடத்தைக் கூட இந்தஅரசு கல்யாண மண்டபமாக மாற்றிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்துத் தரக் கூட இந்த அரசால்முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.