தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு?
சென்னை:
தமிழக ஆளுநர் பர்னாலாவின் பதவி காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆளுநர் பர்னாலாவின் பதவிக்காலம் இன்னும் 10 நாளில் (நவம்பர் 7ம் தேதியுடன்) முடிகிறது. எனவே அவருக்குபதிலாக புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.காங்கிரஸ்காரர் ஒருவரை தமிழக கவர்னராக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்பிய போதிலும் பூடாசிங்போன்ற காங்கிரஸ் முன்னோடிகளால் ஏற்பட்ட சிக்கலால் அந்த எண்ணத்தை காங்கிரஸ் கைவிட்டது.
பர்னாலா அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி செயல்படுபவர். எந்த சிக்கலிலும்சிக்காதவர்.
மேலும் இன்னும் 6 மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் அனுபவம் வாய்ந்தபர்னாலா தமிழக கவர்னராக நீடிப்பது சரி என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. தீபாவளிக்கு பிறகுஇதற்கான அறிக்கையை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வெளியிடுவார் என்று தெரிகிறது.
ஆனால், மீண்டும் பஞ்சாப் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தில் உள்ள பர்னாலா இந்த பதவி நீடிப்பை ஏற்பாரா என்றுதெரியவில்லை.