சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜெ !
சென்னை:
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்.
சென்னையில் இடைவிடாத கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்வெள்ளத்தில் மிதக்கின்றன.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிரஆலோசனை நடத்தினார்.
பிறகு ஜெயலலிதா மழையால் பாதிக்கப்பட்ட பூங்கா நகர், யானை கவுனி, சூளை, வேப்பேரி, ஆகிய இடங்களைபார்வையிட்டார். பின்னர் சிந்தாரிபேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைசந்தித்து பேசினார்.
அதை தொடர்ந்து அண்ணா நகர் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி குளம் நிரம்பி இப்பதை பார்வையிட்டார்.அங்கிருந்து நொச்சிகுப்பம் பகுதிக்கு சென்று அங்கு சமூக நல கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துஆறுதல் கூறினார்.
நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. மழை நிலவரங்களை அரசு நிர்வாகம் மிக திறமையாகசமாளித்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.
மேலும் நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. தேவையான பகுதிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
மின்சாரம் தாக்கி மரணம் ஏற்படுவதை தடுப்பதற்காக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மழை சேதங்களை கண்டறியவும், நிவாரண பணிகளை செய்யவும் அமைச்சர்கள் பொன்னையன், பன்னீர்செல்வம், ஜெயக்குமார். தளவாய் சுந்தரம், அனிதா ராதாகிருஷ்ணன், விசுவநாதன், அன்பழகன் ஆகியோர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை ஓய்ந்ததும் இது பற்றி ஆராய்ந்து மத்திய அரசிடம் நிவாரணஉதவி கோரப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications