மருதுபாண்டியர் விழா: சிக்கிய கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

Karthik

மருதுபாண்டியரின் குருபூஜைக்கு வந்த நடிகர் கார்த்திக் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் கூட்டத்தில்சிக்கித் தவித்தார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் நடிகர்கள்ஊர்வலம் நடத்தக் கூடாது என்றும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் தேவர் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் தேவர் குருபூஜை விழாவில் தனது அரசியல் பிரவேசம் குறித்துஅறிவிப்பார் என்று செய்தி வெளியானதை தொடர்ந்து, அதை தடுக்கவே தமிழக அரசு இந்த முன்னேற்பாடுகளைசெய்தது.

இந் நிலையில் மருது பாண்டியர்களின் 204வது குருபூஜை விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கார்த்திக் வந்த தகவல் அறிந்ததும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மருது பாண்டியர்நினைவிடத்தில் குவிந்தனர். இதனால் கார்த்திக்கால் நினைவிடத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.

பிறகு கார்த்திக் ரசிகர்களை பார்த்து கும்பிட்டு வழிவிடுமாறு சைகை மூலம் கேட்டார். கூட்டம் அதிகமானதே தவிரவழி கிடைக்கவில்லை. இதனால் திக்குமுக்காடிப் போன கார்த்திக் ஒரு கட்டத்தில் பதற்றமானார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரை பின் பக்க பாதை வழியாக மீட்டுச் சென்றனர்.

அங்கும் கூட்டம் அதிகமானதால் அவரால் அந்தப் பகுதியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இதையடுத்துபோலீசார் கார்த்திக்கை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அதன் மூலம் மாற்று பாதைவழியாக அழைத்து வந்து அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+