செம்மொழி தகுதி பெற 2000 ஆண்டுகால பழமை வேண்டும்- மத்திய அரசு
சென்னை:
செம்மொழிக்கான தகுதியை 1,500 ஆண்டில் இருந்து 2,000ம் ஆண்டாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாவது:தமிழை செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது செம்மொழிக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு(மொழியின் பழமையை நிர்ணயிக்க) குறைவாக இருக்கிறது என்றும்,
அதை 2,000ம் ஆண்டாக நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியதை திமுக தலைவர்கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் கவனத்திற்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கவனத்திற்கும் நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் கொண்டு சென்றிருந்தார்.
அதற்கேற்ப தற்போது கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், செம்மொழிக்கான தகுதியை 1,500 ஆண்டில்இருந்து 2,000ம் ஆண்டாக உயர்த்தப்பட்டது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் செம்மொழிப் பட்டியலில் தமிழ் மொழியுடன் சமஸ்கிருத மொழியும்இணைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழும், சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதியை இந்தியாவில் பெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டவுடன் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளையும்செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்தந்த மாநிலங்களில் எழுந்துள்ளது.
இதையடுத்து ஒரு மொழி செம்மொழி அந்தஸ்து பெற வேண்டுமானால் 2,000 காலப் பழமையும், 2000 காலஇலக்கிய வளமும் இருக்க வேண்டும் என்ற தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என கருணாநிதி உள்ளிட்டோர் மத்தியஅரசைக் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications