கொள்ளிடம் கரை உடைந்து கிராமங்களில் வெள்ளம்
சீர்காழி:
கொள்ளிடம் கரை உடைந்து 10 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
சீர்காழி அடுத்த அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்து அப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்டகிராமங்களில் வெள்ளம் புகுந்தது. எனவே அந்த பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.கொள்ளிட ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அணை உடைந்ததால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிரமாங்களில்வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் 14 பஸ்கள் மூலம் வெளியேற்றப்பட்டு பள்ளி மற்றும் திருமணமண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரை உடைந்ததால் அளக்குடி, காடுவெட்டி, சேத்திருப்பு, பில்படுகை, கோரத்திட்டு, நானல்படுகை உள்ளிட்ட 10கிராமங்களில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சாகுபடி நிலங்களும் நீரில் மூழ்கின.
வெள்ளம் பாதித்த முதலை மேடு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் சேலம் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால்வாழப்பாடி அருகேயுள்ள கரியகோயில் அணை நிரம்பி வழிகிறது. 4 ஆண்டுகளுக்கு மேல் வறண்டிருந்தஆணைமடுவு அணையில் 41 அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications