தேவர் குருபூஜை தொடங்கியது: ஜெ வருகை
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருஜை விழா இன்று தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள பசும்பொன் கிராமம் தான் முத்துராமலிங்க தேவர் படித்து வளர்ந்த ஊர்ஆகும். எனவே இங்குள்ள தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவர் புகழ் பாடும்வகையில் ஆன்மீக விழா, அரசியல் விழா, குருபூஜை விழா என நடைபெறும்.இந்த ஆண்டு குருபூஜை விழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி 30ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 6 மணிக்கு ஆன்மீக விழா மங்கள இசையுடன் தொடங்கியது. நாளை தேவரின் அரசியல் விழாவைமுன்னிட்டு தேவரின் அரசியல் சொற்பொழிவு, நாடகங்கள் நடைபெறுகிறது.
30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவரின் 98வது ஜெயந்தி விழா மற்றும் 43வது குருபூஜை விழா நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா அன்று மதியம் 1 மணிக்கு தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். முதலமைச்சர்வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அமைச்சர்கள் பன்னீர் செல்வம்,வைத்தியலிங்கம், விசுவநாதன், நைனார் நாகேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
திமுக சார்பில் துணை பொது செயலாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ரகுபதி, பழனி மாணிக்கம், பவானிராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொது செயலாளர் வைகோ, எல்.கணேசன்,பாஜக எம்பி திருநாவுக்கரசர், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திரலேகா,
மற்றும் நடிகர் கார்த்திக், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழகதலைவர் டாக்டர் சேதுராமன் உள்பட பலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தேவர் பூஜை 3 நாள் நடைபெறுதையொட்டி பசும்பொன் கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காகடிஐஜி அலெக்சாண்டர் மோகன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications