ஜெ, கருணாநிதி வீடுகளிலும் வெள்ளம்
சென்னை:
சென்னையில் கன மழைககு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமும், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம்இல்லமும் தப்பவில்லை.
ஜெயலலிதாவின் வீட்டுச் சாலையில் வெள்ளம் சூழ்ந்து வீட்டின் புல்வெளிப் பகுதி நீரில் மூழ்கியது. இதையடுத்து ராட்சதமோட்டார்கள் கொண்டு வரப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.அதே போல கருணாநிதியின் வீடு, அருகே உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீடு ஆகியோரின் வீடுகளையும் வெள்ளம்சூழ்ந்தது.
இதற்கிடையே கடலூரில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ந்து வெள்ளத்தில்மூழ்கிக் கிடக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் சிதம்பரம், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம் மாவட்டத்தில் சுமார் 850 ஹெக்டேர் சம்பா நெல் நீரில் மூழ்கிவிட்டது. அதே போல கரும்பு, வாழை, மணிலா, மல்லிகைஆகிய தோட்டங்களும் ஹெக்டேர் கணக்கில் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. சிதம்பரத்தில் சுமார் 60 ஆடு, மாடுகள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications