For Daily Alerts
Just In
சதுர்வேதிக்கு குண்டாஸ் சரி- உச்சநீதிமன்றம்
சென்னை:
தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திய வழக்கில் கைதாகியுள்ள சதுர்வேதியை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளை ஹைதராபாத்துக்குக் கடத்திச் சென்றுபாலியல் கொடுமைப்படுத்தியதாக சாமியார் சதுர்வேதியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இதை எதிர்த்து சதுர்வேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். குண்டர் சட்டத்தில் தன்னைக் கைது செய்ததுசெல்லாது என அறிவிக்க அவர் கோரினார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை, சதுர்வேதியின் மனுதள்ளுபடியானது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சதுர்வேதி மேல் முறையீடு செய்தார். சதுர்வேதியின் மனுவைப் பரிசீலித்தஉச்சநீதிமன்றம், குண்டர் சட்டத்தில் சதுர்வேதி கைது செய்யப்பட்டது செல்லும் என தற்போது தீர்ப்பளித்துள்ளது.
எனவே சதுர்வேதியால் இன்னும் ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, October 29, 2005, 5:30 [IST]