ஜெயேந்திரர் வழக்கு மாற்றம்: வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் வழக்கை தமிழகத்திலிருந்து புதுவைக்கு மாற்றியுள்ளது ஒரு மோசமான முன்னுதாரணமாகஅமைந்து விடும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சங்கரராமன் கொலை வழக்கை செங்கல்பட்டுநீதிமன்றத்திலிருந்து புதுவைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மோசமானமுன்னுதாரணமாக இது அமைந்து விடும்.
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கொலை வழக்குகள். அரசியல் காரணமாகபோடப்பட்ட வழக்குகள் அல்ல. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றுகூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications