ஜெ. கொடுத்த இப்தார் விருந்து
சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இப்தார்விருந்து அளித்தார்.
அதிமுக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை இப்தார் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக பிரமுகர்கள்திரளாக இதில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு குறித்தும், ரம்ஜான் மாதத்தின் போதுஇருக்கும் விரதத்தின் மகிமை குறித்தும் விரிவாக விளக்கினார்.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசுகையில், பல கட்சிகளின் தலைவர்கள், பிற அமைப்புகள் சார்பில்நடத்தப்படும் இப்தார் விருந்துகளில் தான் கலந்து கொள்வர். ஆனால் ஜெயலலிதா மட்டுமே ஆண்டுதோறும்அதிமுக சார்பில் இப்தார் விருந்து அளிக்கும் ஒரே தலைவராக திகழ்கிறார்.
கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி வந்தாலே அதற்கு முன்பாக ஏராளமான பேரைதீவிரவாதிகள் என்று கூறி சிறையில் அடைத்து விடுவார்கள். ஆனால் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு தான்முஸ்லீம்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றார்.
வக்பு வாரியத் தலைவர் பதர் சையத், ஆற்காடு இளவரசர் அப்துல் அலி உள்ளிட்ட பலரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.