செம்மொழி தகுதி: பிரதமருக்கு கருணாநிதி நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு மொழியை செம்மொழி என அறிவிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆண்டுகளை 2000 வருடங்களாக உயர்த்திமத்திய அரசு அறிவித்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குதிமுக தலைவர் கருணாநதி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மன்மோகன் மற்றும் சோனியா காந்திக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், ஒருமொழியை செம்மொழி என அறிவிக்க அதன் கால வயதை 1500 ஆண்டுகளிலிருந்து 2000 ஆண்டுகளாக உயர்த்தவேண்டும் என நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது செம்மொழிக்கான ஆண்டு நிர்ணயத்தை 2000 வருடங்களாக மத்திய அரசுஉயர்த்தியுள்ளது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் உங்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார் கருணாநதி.இதேபோல, மத்திய மனித வள அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கும் அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications