ரூ.1கோடி பயணக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்த ரெயில்வே
சென்னை:
சென்னையில் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணிகளின் டிக்கெட் கட்டணம்முழுமையாகத் திருப்பித் தரப்பட்டது.
ரூ. 1 கோடி வரை பயணிகளின் கட்டணத்தை தென்னக ரெயில்வே திருப்பிக் கொடுத்துள்ளது.இந்திய வரலாற்றிலேயே இதுவரை இந்த அளவுக்கு பயணிகள் கட்டணம் திருப்பித் தரப்பட்டதில்லை எனரெயில்வே செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வியாழக்கிழமைதான் இந்த பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
அன்றைய தினம் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் புயல்,மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்துப் பயணிகளுக்கும் பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதுதவிரஎழும்பூரிலிருந்து செல்ல வேண்டிய பல ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரெயில்களுக்கான பயணக் கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 8 சிறப்பு கவுண்டர்களை தென்னகரெயில்வே இயக்கியது. கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications