இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தை அச்சுறுத்தி வந்த புயல் சின்னத்தால் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து கடலோர தமிழகத்தைபயமுறுத்தியது.
குறிப்பாக சென்னை நகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேய் மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர், நகரமேதெப்பக்குளமாக மாறியது.
இந்த நிலையில் தற்போது மழை விட்டுள்ளது. நேற்று முதல் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் வடகிழக்குப் பருவமழை காரணமாக வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும், இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications