For Daily Alerts
Just In
திருச்சி: பஸ்-வேன் மோதல்- 16 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே அரசு பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சிலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை சரக்கு வேனில் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர்.துவாக்குடி என்ற இடத்தைத் தாண்டி அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாகவந்து கொண்டிருந்தது.
இரு வாகனங்களும் பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் வேன், தூக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம்செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் துவாக்குடி, திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, October 29, 2005, 5:30 [IST]