டெல்லி குண்டுவடிப்பு: உஷார் நிலையில் சென்னை
சென்னை:
டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை நகரில் காவல்துறையினர் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை அடுத்தடுத்து நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர்பலியாயினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் செயலாக இது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத் தலைநகர் சென்னையிலும், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள், மசூதிகள்,தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தீபாவளிக் கூட்டம் அதிகமாக உள்ள தி.நிகர், புரசைவாக்கம்உள்ளிட்டக்கிய இடங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
முக்கியச் சாலைகளின் சந்திப்புகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.
ரெயில்வே நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்குள்வருவோரிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
ரெயில்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான வகையில் கிடக்கும் பொருட்கள், பார்சல்களை பொதுமக்கள் தொட வேண்டாம், அதுகுறித்து அருகில்உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை ஏற்கனவே சந்தித்துள்ள கோவையிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியஇடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அமைப்புகள் சிலவற்றின் செயல்பாடுகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மதுரையிலும் மீனாட்சிஅம்மன் கோவில், ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருகிறது.