தேவர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி
பசும்பொன்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதல்வர்ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பசும்பொன் கிராமத்தில் உள்ளஅவரது நனைவிடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன் இன்று வந்தார்.அவரை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நினைவிட நுழை வாயிலில் தேவரின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் நினைவிடத்திற்குள் சென்ற ஜெயலலிதா அங்குள்ள சமாதியில்,மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.
பின்னர் தேவர் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று வீட்டைப் பார்வையிட்டார். அவருடன் தேவர் குடும்பத்தினர்ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நைனார் நிாகேந்திரன்,திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், பாஜக தேசிய துணைத் தலைவர் வெங்கையா நாயுடுஉள்ளிட்டோர் தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தேவர் பேரவையைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அஞ்சலி செலுத்தினர்.
சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோரும் அஞ்சலிசெலுத்தினர்.