இன்று தேவர் குருபூஜை: உச்சகட்ட பாதுகாப்பில் பசும்பொன்
பசும்பொன்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில்இன்று நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்,நடிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதையொட்டி உச்சகட்ட பாதுகாப்பில் பசும்பொன் கிராமம் கொண்டு வரப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 98வது பிறந்த நாள் மற்றும் 43வது மறைந்த தினம் இன்றுகுருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.இதையடுத்து பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள்,முக்குலத்தோர் அமைப்புகளின் தலைவர்கள், தேவர் சமுதாயத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
இந்த ஆண்டு புதிதாக பல நடிகர்களும் தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர். புதிதாகஅரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகும் நடிகர் கார்த்திக்கும் இன்று தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலிசெலுத்துகிறார்.
தேவர் நினைவிடத்தில் இன்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக தனிவிமானம் மூலம் மதுரை வரும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வருகிறார்.
தேவர் நினைவிடத்தில் அவர் மலரஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் மீண்டும் மதுரை திரும்பி சென்னைக்குசெல்கிறார்.
ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவரும் சுமார் 30 நிமிட நேரம் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல பல்வேறு முக்குலத்தோர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களுக்கும்நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் கார்த்திக், விவேக், செந்தில், அருண்பாண்டியன், விஜயகாந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்த நேரம்ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் அஞ்சலிசெலுத்தவுள்ளனர்.
பசும்பொன் கிராமத்தை நோக்கி வரும் அனைத்து முக்கியச் சாலைகளிலும் போலீஸார் சோதனைச் சாவடிகளைஅமைத்து வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
குருபூஜையையொட்டி மதுரை நகரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஊர்வலங்களும் நடைபெறவுள்ளதால்,பசும்பொன், மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் அனைத்திலும் உச்ச கட்டப் பாதுகாப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications