தீபாவளி: பர்னாலா, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா மற்றும்தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பர்னாலாவெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,தீப ஒளி நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் உருவகப்படுத்துகிறது. தமிழகத்தில்அமைதி, வளம், மகிழ்ச்சி நிலவும் இந்த நேரத்தில் பல் துறைகளில் முன்னேற்றம் ஏற்படவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒளியாய் இருப்பது தெய்வம். தீபவெளிச்சத்தில் தெய்வத்தைக் காண்பது தீபாவளிப் பண்டிகையின் மரபு.
தீபாவளி என்றால் தீப வரிசை என்று பொருள். இந்த நேரத்தில் ஒளி பெருகட்டும், இருள்அகலட்டும். வேற்றுமையை மறந்து, ஒற்றுமையாய் இருந்து மன மகிழ்வுடன் கொண்டாடும்வேலையில் அனைத்து மக்களையும் நான் உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறுதலைவர்களும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications