அரக்கத்தனம் அழியட்டும்: ஜெயேந்திரரின் தீபாவளி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மனதில் குடியிருக்கும் இருளை விரட்ட தீபாவளிப் பண்டிகை உதவட்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தீபாவளி வாழ்த்துதெரிவித்துள்ளார்.கடந்த தீபாவளி தினத்தன்று தான் ஜெயேந்திரர் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந் நிலையில் இந்த தீபாவளிப்பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மனதை சூழ்ந்துள்ள இருளை விரட்ட தீபங்களை ஏற்றும் பண்டிகைதான் தீபாவளிப் பண்டிகை.
இந்த நோக்கத்தில்தான் கிருஷ்ண பரமாத்மா தீபாவளிப் பண்டிகையை ஆரம்பித்து வைத்தார். அரக்கத்தனம் அழிந்து, மனதில்புத்துணர்வும், புத்தறிவும் குடிபுகும் நாளாக தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தீபத் திருநாளில் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஜெயேந்திரர்.












Click it and Unblock the Notifications