விஜய்காந்த் கட்சியின் இப்தார் விருந்து!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சென்னையில் கொடுக்கப்பட்ட இப்தார் விருந்து நிகழ்ச்சியில் நடிகர் விஜயகாந்த் கலந்துகொண்டு நோன்புக் கஞ்சி குடித்தார்.
அனைத்துக் கட்சிகளும் இந்த இப்தார் விருந்து அளித்து வரும் நிலையில், புதிதாகப் பிறந்துள்ள தே.மு.தி.க. சார்பிலும் சென்னையில்இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, நோன்புக் கஞ்சி குடித்த பின் அவர் பேசுகையில்,
ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு புதிதல்ல. வழக்கமாக நான் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளில்விரும்பிக் கலந்து கொள்வேன்.
சிறுபான்மை மக்களுக்காகத்தான் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். சிறுபான்மை மக்களுடன் நான் எப்போதும் அன்பாக பழகி வருகிறேன்.என்னைப் பொருத்துவரை மத, சாதி வேறுபாடு கிடையாது, எல்லோரும் ஒன்று என்பதுதான் எனது எண்ணம்.
சானியா மிர்ஸா போல நம் சமூக பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும், சாதனைகள் படைக்க வேண்டும், ராக்கெட் விட வேண்டும்,நிலவுக்குப் போக வேண்டும். இப்படி சமூகத்தையும் உயர்த்தி, தாங்களும் உயர வேண்டும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications