டெல்லி குண்டு வெடிப்பில் துப்பு கிடைத்தது
சுல்தான்பூர்:
டெல்லியில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவ் பகுதியை கவர்னர் ராஜேஷ்வர் பார்வையிட்டதில் எந்ததவறும் இல்லை. இதில் சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் நடந்து கொள்ளவில்லை.
டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான அமைதிநடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இரு நாடுகளின் நல்லுறவை விரும்பாத சில தீவிரவாத இயக்கங்கள்அதை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
டெல்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து புலானாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் விரையில் வெளி உலகுக்கு தெரிவிக்கப்படுவர். நம்முடையபாதுகாப்பு அமைப்புகள் குறிப்பாக போலீஸ் துறையில் இன்னும் முன்னேற்றம் அவசியம், அதற்கு தேவையானநடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications