இளையராஜா மீது புகார்
சென்னை:
![]() |
சென்னை பம்மலை சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஜான் இளையராஜா தன் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகபுகார் கூறியுள்ளார்.
இவர் போலீஸ் கமிஷனர் நடராஜிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கூடல் நகர் படம் எடுக்க முடிவு செய்து படத்துக்கு இசை அமைக்க இளையராஜாவுக்கு ரூ. 7லட்சமும், நடிகைமல்லிகாவுக்கு ஒரு லட்சமும் ஒப்பந்தம் செய்தேன். கோகுல கிருஷ்ணன் என்பவர் மூலம் இந்த ஒப்பந்தம்கையெழுத்தானது.
இதற்காக கோகுல கிருஷ்ணனுக்கும் ரூ. 75,000 அட்வான்ஸ் கொடுத்தேன். பின்னர் இந்த படத்தை ஞானவேல்,ஜெயபிரகாஷ், என்பவருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. ரூ. 8 லட்சத்துக்கு அவர்களுக்கு விற்க ஒப்பந்தம்கையெழுத்தானது.
இதற்காக அவர்கள் கொடுத்த செக் பாங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இந்த பணத்தை திரும்பகேட்டேன். அதற்கு அவர்கள் இளையராஜாவிடம் வாங்கி கொள்ளுங்கள் என்றனர்.
![]() |
இளையராஜாவின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டேன். பலமுறை அலைகழித்தார்கள். போனில் பேசினால்என்னிடம் பணம் கேட்கக் கூடாது. போனிலும் பேசக் கூடாழ என்று கூறிவிட்டார்.
பின்னர் நடிகை மல்லிகா உதவியாளர் சுந்தரிடம் சென்று பணத்தை கேட்டேன். அப்போது சுந்தர், ஞானவேல்,ஜெயபிரகாஷ் ஆகியோர் என்னை அடித்தார்கள். பணம் கேட்டால் சுட்டுக் கொன்று விடுவேன் என்றுமிரட்டினார்கள்.
அதனால் நான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை, இளையராஜா, நடிகை மல்லிகா, உதவியாளர் சுந்தர், கோகுலகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications