கராத்தேவை பிடிக்க டெல்லி விரைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி துணை மேயர் கரத்தேவே கைது செய்ய போலீஸ் தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

சென்னை துணை மேயர் கராத்தே ஒரு மாதத்திற்கு முன்பு தலைமறைவாகிவிட்டார்.

அவரை கைது செய்ய போலீசார் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளை அவர் மீதுதயார் செய்து வைத்துள்ளனர்.

அவர் ஜாமீனில் வெளியே வந்து விருார் என்பதற்காக இன்னும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி-ஆய்வாளர் 2 போலீஸ் அடங்கிய தனிப்படை டெல்லியில் ஏற்கனவேஉள்ள போலீசாருடன் தங்கியிருந்து கராத்தேவை கைது செய்ய டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் கராத்தே காங்கிரசில் சேருவதற்கு முன்பாக அவரை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

மாநகராட்சி கூட்டம் வருகிற 30ம் தேதிக்குள் கூட்டப்பட வேண்டும், கடைசியாக நடந்த ஆகஸ்டு 30ம் தேதிகூட்டம் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி சட்டப்படி துணை மேயர் தான் வருகிற 22ம் தேதிக்குள் சென்னை வந்து மன்ற கூட்டத்தைகூட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அவர் வராவிட்டால் அமைச்சரவை கூடி கூட்டத்தை கூட்டும் அதிகாரத்தை மாநகராட்சி கமிஷனருக்கு வழங்கும்என்று கூறப்படுகிறது.

மாநகராட்சி மன்ற அதிமுக தலைவர் சுகுமார் பாபு இந்த கூட்டத்தை நடத்துவார் என்றும் அப்போது கவுன்சிலர்கள்மூலம் துணை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம்என்று தெரிகிறது.

அதன் பிறகு தேர்தல் நடத்தி புதிய துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குள் கராத்தே கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+