காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம்
மேட்டூர்:
கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும்நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து காவிரியில் வெள்ளப் பெருக்குஏற்பட்ட 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பின்னர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததால் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை எதிரொலியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே அணை நிரம்பி வழிவதால் வருகிற நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 17ம் தேதி அணை மூன்றாவது முறையாக நிரம்பியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும்மேட்டூருக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதில் 60,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்து மேலும் உயர்ந்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரிக் கரையோரங்களில் வசிப்பவர்கள் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.