For Daily Alerts
Just In
வருமான வரி ரிடர்ன்: ப.சி. நேரில் தாக்கல்
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்ற மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம், கடந்த ஆண்டுக்கான வருமான வரி ரிடர்னை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு வருமான மற்றும் வரி செலுத்தியதற்கான விவரத்தை (ரிடர்ன்) தாக்கல் செய்வதற்கு அக்டோபர்31ம் தேதி கடைசி நாளாகும்.இதையடுத்து வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.
மேலும், மக்களுக்கு முன்னோடியாக சென்னை வருமான வரி அலுவலகத்திற்கு தானே நேரில் சென்று தனதுவருமான வரி ரிடர்னை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி திங்கள்கிழமை வருமான வரி அலுவலகம் வந்த ப.சிதம்பரம், அங்குள்ள வரி உதவியாளர்தங்கச்சாமியிடம் தனது ரிடர்னை தாக்கல் செய்தார்.
பின்னர் அவருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. வருமான வரி கட்டுவதை ஏளனமாக நினைக்கக் கூடாது.மாறாக கவுரவத்தையும், பெருமிதத்தையும் அளிக்கக் கூடியது என்று கூறினார் ப.சிதம்பரம்.
Comments
Story first published: Wednesday, November 2, 2005, 5:30 [IST]