உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் சபர்வால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒய்.கே.சபர்வால் பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லகோதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த பதவியை யோகேஸ்குமார் சபர்வால் (வயது 63) ஏற்றுக் கொண்டார்.அவருக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பல்வேறு தீர்ப்புகளின் கதாநாயகனாக விளங்கும் சபர்வால், சமீபத்தில் பீகார் சட்டசபை கலைப்பு சட்டவிரோதம்என்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசியல் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை இவர் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications