For Daily Alerts
Just In
விடைத்தாள் திருத்த மோசடி: 40 மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வினாத்தாள் மோசடி விவகாரத்தில், 7 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களைஇரண்டு ஆண்டுகளுக்கு கல்லூரிகளிலிருந்து நீக்கி அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டி நிறுவனத்தில் வைக்கப்படிருந்த பொறியியல்கல்லூரி விடைத்தாள்கள் திருடப்பட்டு அவற்றில் திருத்தம் செய்து மோசடி நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 7 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் 40 மாணவர்களையும் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழக செனட் முடிவு செய்துள்ளது.
எனவே இந்த மாணவர்களால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வகுப்புகளுக்கு வர முடியாது, தேர்வுகளும் எழுத முடியாது.
Story first published: Wednesday, November 2, 2005, 5:30 [IST]