பார்த்தசாரதி கோவிலில் வெடிபொருள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குள் வெடிமருந்துகள், பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் காவல்துறையினர்ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், கோவில்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில்,வெடிமருந்துகள், பட்டாசுகள் ஆகியவை அடங்கிய பொட்டலம் ஒன்றைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதை யார் இங்கே வைத்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்த்தசாரதி கோவிலிலும்,
அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications