For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் முகாம் மீது குண்டு வீச்சு
பாக்தாத்:
அமெரிக்க அல்கொய்தா தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தகர்த்துள்ளது.
ஈராக்கில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைகள் மீது சதான் உசேன் ஆதரவு தீவிரவாதிகள்தெடர்ந்து கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது வரை 2,200 அமெரிக்க வீரர்கள் தீவிரவாதிகளின்தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.பின்லேடனின் அல் கொய்தா இயக்கமும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்தது. சிரியா எல்லையைஒட்டியுள்ள பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாதிகள் முகாம் அமைத்து அங்கு ஈராக் தீவிரவாதிகளுக்கு பயிற்சிஅளித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சிரியா எல்லையை ஒட்டியுள்ள காயின், கராபில்லா ஆகிய கிராமங்களில் அமெரிக்க ஜெட்விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. தரைப்படையும் இந்த கிராமங்களை சுற்றி வளைத்தன.
இந்த அதிரடி தாக்குதலில் 40 பேர் பலியானார்கள். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 400 க்கும்மேற்பட்ட தீவிராதிகள் கைது செய்யப்பட்டனர்.
Comments
Story first published: Wednesday, November 2, 2005, 5:30 [IST]