திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர்:
புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.
சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான வீடுதிருச்செந்தூர்.இங்கு தான் சூரபத்மன் என்ற அரக்கனை வதம் செய்தார் முருகப் பெருமான். கடலோரம் அமைந்துள்ளஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாககொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான சஷ்டித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம்உள்ளிட்டவை நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு ஜெயந்தி நாதர் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள யாக சாலைமண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
தொடர்ந்து தீபாரதானை, அபிஷேகங்கள், யாக சாலை பூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நவம்பர் 7ம் தேதிசூரசம்ஹார நகழ்ச்சி நடைபெறுகிறது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடக்கும்.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. காவல்துறையும், கோவில்நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications