கராத்தே காங்.சில் சேர்க்கப்படுவாரா? வாசன் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனை கட்சியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் கட்சியில்சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.அவரை கட்சியில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கட்சி மேலிடம்கருத்து கேட்கும் அவசியம் ஏற்பட்டால் கருத்தை கேட்பார்கள்.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம். ஆறு, குளங்களை சரிவர தூர் வாராமல் விட்ட காரணத்தால் தான் அதிக அளவில் பாதிப்புஏற்பட்டு விட்டது.
எனவே காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்வாசன்.












Click it and Unblock the Notifications