சென்னையில் காலரா பரவுகிறது
சென்னை:
சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் காலரா, வாந்தி பேதி பரவுகிறது.
இதுவரை 90க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது.
இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதந்தன. இந்தத் தண்ணீர் இன்னும் கூட பல பகுதிகளில்வடியாமல் தேங்கி நிற்கிறது. இப்படித் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் வாந்தி, வயிற்றுப் போக்கு பரவத்தொடங்கியுள்ளது.
கிண்டி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட சில இடங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் இதுவரை 90க்கும் மேற்பட்டோர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் தான் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கு காலரா ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலரா நோய் சென்னை நகரில் பரவும் அபாயம் இல்லை என்றுதண்டையார்பேட்டை மருத்துவமனை பொறுப்பு இயக்குநர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
தண்டையார்ப்பேட்டை தவிர எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், அரசு பொது மருத்துவமனை,ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications