வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் தமிழகத்துக்குஆபத்து நீங்கியது.இந்த நிலையில் வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் தெற்குஆந்திரா கடற்கரையோரம் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது லேசானது முதல்மிகப் பலத்த மழை பெய்யக் கூடும்.












Click it and Unblock the Notifications