நீதிபதிகள் நியமன தாமதம்: தலைமை நீதிபதி கவலை

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பெரும் தாமதம் நிலவுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றதலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பதில் பெரும்தாமதம் நிலவுகிறது. என்ன காரணம் என்றே புரியாமல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

புதிதாக 17 நீதிபதிகளை நியமிப்பதற்கான நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தும்கூட அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் மத்திய அரசு தாமதம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஓய்.கே.சபர்வால்செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்குபுதிதாக நீதிபதிகளை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது.

இருப்பினும் இன்னும் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது கவலை தருகிறது. இந்தக் காலதாமதம் ஏன்என்பது குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்கும்.

மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசும், நாடாளுமன்றமும் தான் முடிவு எடுக்க முடியும்.

சட்டத்தை கொண்டு வரும் பொறுப்பு, அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும்அதிகாரம் மட்டுமே எங்களுக்கு உள்ளது என்றார் சபர்வால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+