8ம் தேதி கருணாநிதி கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
இந்து மதத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கட்டுரை எழுதியது தொடர்பான வழக்கில் வருகிற8ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநதி ஆஜராகவுள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில், இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாககட்டுரை எழுதியதாக கூறி கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது சென்னைசைதாப்பேட்டை17வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை கருணாநிதி நேரில் ஆஜராகாமல் வாய்தா கோரி வந்தார்.தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி கருணாநிதியும், முரசொலி செல்வம் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது வருகிற 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,அன்றைய தினம் காலை 11 மணியளவில் கருணாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என திமுகதெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், நவம்பர் 27ம் தேதி வரை கருணாநிதிக்குஏராளமான பணிகள் உள்ளன.
இருப்பினும் வருகிற 8ம் தேதி காலை 11 மணியளவில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு கருணாநிதி ஆஜராவார்என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications