For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாளில் 8 பேர் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரோடு அருகே கோவில் பூசாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பூசாரியைக் கொன்று உண்டியலில்இருந்த பணம் திருடப்பட்டது.

கொல்லம்பாளையம் கிராமத்தில், இளங்கோ என்பவர் வாய்த் தகராறில் அவரது நண்பரால் அடித்துக்கொல்லப்பட்டார்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில், ஜாமீனில் விடுதலையாகி வந்த பெருமாள் என்பவர் பட்டப் பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

முன் பகை காரணமாக அவரைக் கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆண்டிப்பட்டியில் நகராட்சி ஊழியர், சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதேபோல, கன்னியாகுமரி, உடுமலைப்பேட்டை, ஆணைமலை ஆகிய பகுதிகளிலும் தலா ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X