மீண்டும் பொடா தேவை: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டம் இல்லாத காரணத்தால் தான் தீவிரவாத செயல்கள் அதிகரித்து விட்டன. எனவே மீண்டும் பொடாசட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நோன்புக் கஞ்சி குடித்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்த பிறகு நாட்டில்தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும் அதிகரித்து விட்டன.
பொடா சட்டம் இல்லை என்ற தைரியத்தில் தான் தீவிரவாதிகள் மிகவும் சுதந்திரமாக செயல்படத் தொடங்கிவிட்டனர்.
புதுடெல்லியில் நடந்துள்ள வெடிகுண்டுச் சம்பவம் இதற்கு சரியான உதாரணம். எனவே மீண்டும் பொடாசட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் தீவிரவாதச் செயல்களைத் தடுக்க முடியும் என்றார் திருநாவுக்கரசர். நிகழ்ச்சியில் நலிவடைந்தமுஸ்லீம்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications