For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெயில் நிலையத்தில் பீதியை ஏற்படுத்திய வாலிபர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலிருந்து கோவை கிளம்பிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிரவாதிகள் பயணம் செய்வதாக வந்ததகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.15 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்புறப்பட்டது. ரெயில் கிளம்பியபோது, ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் 2 பேர் கையில் சூட்கேஸுடன் ஓடி வந்துஏறினர்.

ஏற்கனவே ரெயிலில் அமர்ந்திருந்த ஒருவருடன் அவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். 3 பேரும்தாடியுடனும், வித்தியாசமாகவும் பேசிக் கொண்டதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. அவர்கள்தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகமடைந்த பயணிகள், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துரெயிலை நிறுத்தினர்.

இதையடுத்து டி.டி.ஆர். மற்றும் ரெயில் நிலைய போலீஸார் அங்கு வந்தனர். அவர்களிடம், சம்பந்தப்பட்ட 3பயணிகள் குறித்து மற்ற பயணிகள் கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் ரெயில் நிலைய காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 3 பேரில் மது, ரதீஷ் ஆகிய இருவரும் கேரள மாநிலம்எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. 3வது நபரின் பெயர் மகந்தா. இவர் அசாம் மாநிலத்தைச்சேர்ந்தவர்.

கேரள வாலிபர்கள் இருவரும் குஜராத் மாநிலத்தில் வெல்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். நவஜீவன்எக்ஸ்பிரஸ் மூலம் இன்று காலை சென்னை வந்த அவர்கள் கேரளா செல்வதற்காக கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில்கடைசி நிமிடத்தில் ஓடி வந்து ஏறியுள்ளனர்.

இருவரும் கூறிய தகவல்கள், அவர்கள் கொடுத்த கவர்கள் குறித்து கேரள போலீஸாரிடம் சென்னை போலீஸார்விசாரிக்கும் படி கூறியுள்ளனர். மகந்தா மன நலை சரியில்லாதவர் என்று தெரிகிறது.

மூன்று பேரும் வைத்திருந்த சூட்கேஸில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.

கேரள வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மையானது என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X