For Daily Alerts
Just In
சென்னை விமானத்தில் கோளாறு: பயணிகள் தப்பினர்
சென்னை:
சென்னையிலிருந்து கிளம்பவிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது, கடைசி நேரத்தில்கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு புறப்படத்தயாராக இருந்தது.பாஜக முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, பிரபல கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம்உள்ளிட்ட பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்தார்.இதையடுத்து விமானம் கிளம்புவது ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
விமானம் கிளம்புவதற்கு முன்பே கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Comments
Story first published: Friday, November 4, 2005, 5:30 [IST]