திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்படும்: ஜி.கே.வாசன்
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கருணாகரன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துபிரச்சாரம் செய்வதற்காக கேரளா சென்றுள்ள ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்தி தலைமையை விரும்பும் யாரும் காங்கிரசுக்கு திரும்பலாம். இது கருணாகரனுக்கும் பொருந்தும்.அவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் கூட்டணியும் பலமாக இருப்பது போல் தமிழகத்திலும் காங்கிரஸ்பலத்துடன் உள்ளது.
திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்தைநான் முதலமைச்சர் உமன் சாண்டியிடம் எடுத்து கூறியுள்ளேன்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications