தமிழர் பகுதியில் ராணுவம் விலக வேண்டும்: இலங்கை தலைவர்
சென்னை:
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ராணுவத்தை உடனடியாக விலக்க வேண்டும்என்று இலங்கை சமூக நீதிக் கட்சியின் தலைவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில்ஒருவருமான விஜே டயஸ் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால்முதலில் வட கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும்.இப்போது பிரதமராக இருக்கும் மகிந்திரா ராஜபக்ஷேவோ அல்லது முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவோ இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்மையாக முயற்சிக்கவில்லை.
இலங்கை மக்கள் இனி மேலும், இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்து இருக்கக்கூடாது.
அவர்களை நம்பக் கூடாது. அப்படி இருந்தால், இலங்கையில் போர் முழக்கம் கேட்டுக் கொண்டே தான்இருக்கும். இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அவர்களைத் தொடர்புபடுத்தும் ஒரு ஆதாரம் கூட இதுவரை வெளியிடப்படாதது குறித்து இலங்கை அரசுவிளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.