புத்துயிர் பெறும் ஆசியாவின் உயரமான பாலம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
ஆசியாவிலேயே மிகவும் உயரமான மற்றும் நீளமான பாலமாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர்பரளியாற்றுப் பாலம் ரூ.40 லட்சம் செலவில் மராமத்து செய்யப்படவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில், பரளியாற்றுக்கு மேலே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பெருந்தலைவர்காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது இந்தப் பாலம் கட்டப்பட்டது.ரூ. 12.90 லட்சம் செலவில் அப்போது இந்தப் பாலத்தை கட்டினார்கள். ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும்,நீளமானதுமாக இந்தப் பாலம் கருதப்படுகிறது.
பல தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களில் இந்தப் பாலம் பல முறை இடம் பெற்றுள்ளது. இத்தகையபெருமை படைத்த மாத்தூர் பாலத்தை மராமத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ரூ. 40 லட்சம் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கி பாலம் புதுப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications