தீவிரவாதிகள் ஊடுறுவல்: சென்னையிலும் வேட்டை
சென்னை:
டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்னையில் ஊடுறுவி விடாமல்தடுப்பதற்காக தீவிர கண்காணிப்புப் பணியில் சென்னை மாநகர போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் பெங்களூருக்கு தப்பி வந்து விட்டதாக டெல்லி போலீஸார்சமீபத்தில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை சென்னை மாநகர காவல்துறை எடுத்துள்ளது.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள், பேருந்துகள், விமானங்களை போலீஸார் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர பெங்களூர் மற்றும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் வரும் சாலைகளில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டும் தீவிர வாகனப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுவரை பெங்களூரிலிருந்து தீவிரவாதிகள் யாரும் சென்னைக்குள் ஊடுறுவவில்லை என்றும்,முன்னெச்சரிக்கையாகவே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications