ரெயில்கள் மோதலில் 2 பெட்டிகள் தடம் புரண்டன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்டதில் காலியாக இருந்த 2பெட்டிகள் தடம் புரண்டன.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே கோபால்சாமி நகரில் காலியான ரெயில்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.இங்கிருந்து தான் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்படும்.வெள்ளிக்கிழமை இரவு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு வந்த பின்னர் காலி பெட்டிகள்கோபால்சாமி நகர் ரெயில்வே யார்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் ஈரோடு மற்றும் கோவை ரெயில்களின் பெட்டிகளும் இங்கு கொண்டு வரப்பட்டன.
அப்போது குருவாயூர் ரெயில் பெட்டிகள் மீது ஈரோடு ரயில் பெட்டிகள் மோதின.
இதில் 2 பெட்டிகள் தடம் புரண்டன. பின்னர் கிரேன்கள் மூலம் இரு பெட்டிகளும் தூக்கி நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
ரயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications