ஆந்திரா வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து ஆந்திர வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில நலகொண்டா மாவட்டத்தில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் இன்னும் பாதைசீரமைக்கப்படவில்லை. இந்த பாதை வழியாகத்தான் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு அனைத்துரெயில்களும் சென்று வந்தன.இதனால் இன்று(சனிக்கிழமை) முதல் 7ம் தேதி வரை சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக செல்லும் 13 ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்றும், 7ம் தேதியும் ரத்து செய்யப்படும் ரெயில்கள்
சென்னை-புதுடெல்லி கிராண்ட்டிரங்க், சென்னை-ஹைதராபாத், அவுரா-மங்களூர், கன்னியாகுமரி-அவுரா,மதுரை-நிஜாமுதீன், எர்ணாகுளம்-பாட்னா, எர்ணாகுளம்-நிஜாமுதீன், சென்னை-அலகாபாத், மங்களூர்-ஜம்முதாவி,
நாளை ரத்து செய்யப்படும் ரெயில்கள்
சென்னை வழியாக செல்லும் திருவனந்தபுரம்-கோரக்பூர் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில்-அவுரா குருதேவ் எக்ஸ்பிரஸ்
மாற்றுப்பாதையில் செல்லும் ரெயில்கள்
திருவனந்தபுரம்- ஹைதராபாத் குண்டூர், விஜயவாடா வழியாக செல்கிறது
சென்னை-ஹைதராபாத் ரேணிகுண்டா, ஊட்டி வழியாக செல்கிறது
திருவனந்தபுரம்-கவுகாத்தி ரேணிகுண்டா, குண்டூர், நந்தியால் வழியாக செல்கிறது












Click it and Unblock the Notifications