கூவம் ஆற்றின் மேல் மேம்பாலம்: டிஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை போர் நினைவு சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் மேல் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்படும் என்றுமத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
சென்னையில் மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில்மத்திய அமைச்சர் டிஆர் பாலு பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னை, எண்ணூர், மணலி மார்க்கத்தில் ரூ.260 கோடி செலவில் 4 வழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். போர் நினைவுச் சின்னம்முதல் மதுரவாயல் வரை 15 கி.மீ. தூரத்திற்கு ரூ.200 கோடி செலவில் கூவம் ஆற்றின் மேல் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்படும்.
மேலும் அத்திப்பட்டுக்கும், ராயபுரத்திற்கும் இடையே கூடுதலாக ஒரு அகல ரெயில் பாதை அமைக்கப்படும். ரேணுகுண்டாவில்இருந்து பெரியபாளையம், பொன்னேரி வழியாக எண்ணூருக்கு புதிய அகல ரெயில் பாதை போடப்படும்.
எண்ணூரில் ரூ.300 கோடி செலவில் நிலக்கரி முனையம், ரூ.600 கோடி செலவில் இரும்புத்தாது முனையம் ஒன்றும்அமைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications